நம் குரல்

Friday, December 9, 2011

கிழிக்கப்பட்ட பக்கங்கள்


நானில்லா நேரத்தில் அறைக்குள் நுழைகிறீர்கள்
உங்களின் கைகளில் எப்படியோ
சிக்கிவிடுகிறது என் டைரி

இதழ்களில் வெற்றிப்புன்னகை தவழ
தவிப்போடு பக்கங்களைப் புரட்டி
என் தனிமைக்குள்
என் அந்தரங்கங்களுக்குள்
என் சொல்லாத கதைகளுக்குள்
என் சேமித்த சிந்தனைகளுக்குள்
என் இராத்திரி அறைகளுக்குள்
எனக்கு மட்டுமே புரியும் கிறுக்கல்களுக்குள்
என் இரகசியங்களுக்குள்
நுழைகிறீர்கள்

உங்களை
வன்மையாய்ப் பாதியில்
தடுத்துப் நிறுத்திவிடுகிறது
அதன் கிழிக்கப்பட்ட பக்கங்கள்


No comments:

Post a Comment