நம் குரல்

Tuesday, January 4, 2011

வட்டாரங்கள் வாழ்க


கட்சிக்குள் பயங்கர குழப்பம்
உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தி
இதனால் கட்சிக்கு இனி பாதிப்புதான் என
அந்த வட்டாரம் அறிவித்தது

அவரைத் தொடர்ந்து
கட்சியை விட்டு ஆயிரக்கணக்கில்
உறுப்பினர்கள் வெளியேறுவர் என
நம்பப்படுகிறது

இது குறித்து
தலைவருக்கும் துணைத்தலைவருக்கும்
மனக்கசப்பு தோன்றி
இடியப்பச் சிக்கலாக மாறியிருப்பதாக
கூறப்படுகிறது

....இப்படியெல்லாம் நிலைமை
கட்டுக்கடங்காமல் போய்விட்டதாகச்
சொல்லப்படுகிறது

...மேலும் உடனடி நடவடிக்கை
இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என
அறியப்படுகிறது

.... நிலைமை இப்படியே போனால்
எல்லாரையும் ஒன்றுபடுத்துவது சிரமம் என்று
பேசப்படுகிறது

எல்லாரும் செய்திகள் படித்துப்
பேசிச் சிரித்து
உணர்ச்சியில் பொங்கி
பொழுதுகள்போக்கி
இன்புற்றிருக்கச் செய்வதன்றி
வேறொன்றும் அறியார் பராபரமே!

No comments:

Post a Comment