நம் குரல்

Sunday, March 14, 2010

வெறுமை



வண்ணமும் வாசமும் இழந்தன
சோலைப் பூக்கள்

வெறுப்பைத் தந்தன
பூக்களில் அமரும் வண்டுகள்

என்னை ஏளனம் செய்தன
ஜோடிப் புறாக்கள்

வீசும் தென்றலில் இல்லை
எப்போதும் இருக்கும் இதம்

முகம் நிறைய கேள்விகள்
என்னைக் கடக்கும் தோட்டக்காரர்

இருக்கை விட்டு
நகர மறுத்தன கால்கள்

வேகமிழந்து நொண்டின
கடிகார முட்கள்

காற்று வெளிகளில்
நிறைந்து வழிந்தது வெறுமை

அவள் வராத நாள்

No comments:

Post a Comment