நம் குரல்

Wednesday, February 17, 2010

சிற்றின்ப நதியின் தீரத்தில்


நீண்ட நேரம் கரையோரம் அமர்ந்து
ஆசை தீர கால்களை நீட்டி அசைத்து
உடலின் அணுக்களில் ஊடுருவும்
நீரின் குளுமையை அனுபவித்துவிட்டு
போதுமென்றெண்ணி
நீரினின்று கால்களை விடுத்து
விலகி நடக்க நினைத்தும்

முரண்டு பிடித்துக் கால்கள்
நீரின் ருசிக்கு ஏங்கியபடி
எனை இழுத்துக்கொண்டுபோய்
கரையிலே விடுகின்றன

கவ்விப் பிடித்த நீரின் தினவுக்குக்
கால்களைத் தந்துவிட்டு
உயிரை வருடும் அதன் குளுமையை
அதிசயித்தபடி
மீண்டும் மீண்டும் அதனில்
மூழ்கித் திளைக்குமென் மனம்

No comments:

Post a Comment