நம் குரல்

Tuesday, February 16, 2010

ஒரே குடையின் கீழ்


சிறுதூறாலாய்த் தொடங்கி
பெருமழையாய் வலுத்ததால்
சாலையில் வந்த இருவரின் பெரிய குடைக்குள்
நுழைந்தேன்..
நாங்கள் மூவரானோம்

குடைப்பிடியோடு மற்ற இருவரும்
நெருங்கி நின்றதால்
என் மேல் மழைத்துளிகள்
சிந்திக்கொண்டே வந்தன
நனைந்து நனைந்து குளிர்
என் உயிர்வரை ஊடுருவி
உணர்வுகளைப் பற்ற வைத்தது

என் நனைதல் பற்றிக் கூறியும்
அதைப் பொருட்படுத்தாது
வழியில் நனையும் ஆடுகளுக்காக
மனம் இரங்கினார்கள்

அந்தக் குடை விட்டு விலகி
மொத்தமாக நனைந்து
மழையை எதிர்கொண்டு
தனிக்குடை பற்றிச் சிந்தித்தபொழுது

அந்தக் குடை விட்டால் எனக்குப்
பாதுகாப்பில்லை என்றும்
குடைக்குள்ளே வந்து ஒண்டி
உயிர்காத்துக்கொள்ளுமாறும்
குடையிலிருந்து
கேட்டுக்கொண்டேயிருந்தது
ஒரு குரல்

No comments:

Post a Comment