நம் குரல்

Sunday, February 28, 2010

எஸ்.பி.எம் தேர்வில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்

என்னையும் தமிழனாய் இப்புவிக்கு ஈந்த
அன்னையே தமிழே என் ஆவி கலந்தவளே
செம்மொழி நீயானாய் என் சிந்தையில் தேனானாய்
எம்மொழிக்கும் என்னென்றும் நீயே தாயானாய்!

இன்று பொதுவிடுமுறை. ஓய்வெடுக்கும் நாள். ஆயினும், நம் சமுதாயத்தின் முக்கியமான கல்விப் பிரச்சினை குறித்து விளக்கம் பெறவும் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் அனைவரும் உற்சாகத்தோடு அன்பு அழைப்பினை ஏற்றுத் திரண்டிருக்கிறீர்கள். முதலில் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.

மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்)

இந்த விளக்கக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கும் மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதிவு பெற்ற இயக்கமாக இது செயல்பட்டு வருகிறது. அதற்கு, கடந்த பத்து ஆண்டுகளாக, எஸ்.பி.எம். நடவடிக்கைக் குழு என்ற பெயரில் பல பணிகளை அமைதியாக எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இன்றி மேற்கொண்டு வந்தது. இதனை இங்கே இருக்கும் உங்களில் பலர் நன்கு அறிவீர்கள்.

நோக்கம்

மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் முக்கிய நோக்கங்கள் மூன்று: நோக்கம் ஒன்று, எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவது. 340ஆகக் குறைந்த தமிழ் இலக்கியப் பாட மாணவர் எண்ணிக்கையை அரும்பாடுபட்டு பல விதமான முயற்சிகளுக்குப் பிறகு நான்காயிரமாக (4000) உயர்த்தினோம். இதற்குப் பல நல்லுள்ளங்களும் சமுதாய அமைப்புகளும் நமக்குக் கைகொடுத்தன. குறிப்பாக, மாநிலந்தோறும் இருக்கும் தமிழ் மொழிப்பிரிவு உதவி இயக்குநர்களின் பங்கு மிக முக்கியமானது.

மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் முக்கியமாக, எம்.ஐ.இ.டி மூலம் 5000 மாணவர்களுக்கு இலக்கியப் பாட நூல்களைப் பெற்றுத் தந்தோம். இம்முயற்சிக்கு உமா பதிப்பக உரிமையாளர் ஐயா சோதிநாதன் அவர்கள் உற்ற துணையாக இருந்தார். அவருக்கு நமது நன்றியை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறோம்.

நோக்கம் இரண்டு, இந்தப் பாடம் தொடர்பான ஆசிரியர்களின் செயல் திட்டங்களை ஒருங்கிணைப்பது. ஆசிரியர்களுக்குக் கருத்தரங்குகள் வழி இலக்கியம் கற்பிக்கத் தேவையான பயிற்சியினை வழங்குவது. மாணவர்களுக்கு மாநிலந்தோறும் தேர்வுக் கருத்தரங்குளை நடத்துவது.

நோக்கம் மூன்று. தமிழ் இலக்கியம் கற்பிக்கும் இடைநிலைப்பள்ளி, தமிழ்ப்பள்ளி தமிழாசிரியர்களை, தமிழ் உணர்வாளர்களை ஒரு குடையின்கீழ் கொண்டு வருவது.

இந்த மூன்று நோக்கங்களை முன்வைத்து நம் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் செயல்பட்டு வருகிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளோம்.

ஆலோசகர் திரு மூர்த்தி

ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு வேண்டும். அது கட்டுப்கோப்பான இயக்கமாகச் செயல்படவேண்டும். அதற்குத் தலைவராக வருபவர் ஈராண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தால் போதும். தலைமைத்துவப் போராட்டத்தைத் தவிர்ப்போம். தேவையான பயன்மிகு செயல்திட்டங்களை மேற்கொள்வோம் என இந்தக் கழகத்தின் உருவாகத்திற்கும் செயல்பாட்டுக்கும் பின்னால் ஒருவர் உந்துசக்தியாக ஒருவர் இருந்து இயக்கி வருகிறார். அவர் வேறுமல்ல. நமக்கு அரிய லோசனைகளை வழங்கிவரும் கழகத்தின் ஆலோசகர் திரு மூர்த்திதான் அவர், மூர்த்தி பெரிது. அவர் கீர்த்தியும் பெரிதுதான் என்று இந்த வேளையில் அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

10 பாடம் - அதிர்ச்சி

மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் நம் முயற்சி வெற்றிபெற்று வந்த வேளையில்தான் எஸ்.பி.எம், தேர்வில் 10 பாடங்கள் என்ற அதிர்ச்சி அறிவிப்பைக் கல்வி அமைச்சு கடந்த ண்டு வெளியிட்டது. நம் முயற்சியெல்லாம் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாகின.

கல்வி அமைச்சின் முடிவானது தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்கும் மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என்பதை நேரிடையாக சிரியர்கள் என்ற முறையில் நாம் உணர்ந்தோம். உணர்ந்ததைக் கல்வி அமைச்சோடு நடைபெற்ற சந்திப்புக் கூட்டங்களில் பல சமுதாய இயக்கங்களோடு இணைந்து தெளிவாக எடுத்துரைத்தோம். நம் ஊடகங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளாக வெளியிட்டன.

நம் பிரதிநிதி

அமைச்சரவையில் நம் சமூகத்தின் பிரதி நிதியாக இருக்கும் மாண்புமிகு டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் அவர்கள் இந்தப் பத்துப் பாடங்கள் என்ற கட்டுப்பாடு நமக்குப் பெரும் பாதிப்பு என்பதை முழுமையாக உணர்ந்து, நம் கோரிக்கையை அமைச்சரவையில் தொடர்ந்து பலமுறை முன்வைத்தார். எஸ்.பி.எம். 12 பாடச் சிக்கலுக்குத் தீர்வு காண அமைச்சரவையின் பிரதிநிதியாக இவர் நியமிக்கப்பட்டார் என்பதில் இருந்து அவரின் பங்களிப்பை நாம் அறிந்துகொள்ள முடியும்.

பாராட்டு

மாண்புமிகு டத்தோ சுப்ரமணியம் அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் கேள்வி எழுப்பியதால்தான் 10 பாடங்கள் என்ற கட்டுப்பாடு 10 + 2 என்று மாறியது. இப்பொழுது நாம் எழுப்பிய கோரிக்கைக்கு ஏற்ப 12 பாடங்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான டத்தோ அவர்களை நம் தமிழ் இலக்கிய சிரியர் கழகம் மனதாரப் பாராட்டுகிறது. “இனி முடியாது” என்று பலர் மனம் தளர்ந்து போன நிலையில் “முடியும்” என்று சாதித்துக் காட்டினார் டத்தோ. இந்த வேளையில் மாண்புமிகு டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களுக்கு நம் கழகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்.

மீண்டும் ர்வம்

டத்தோ அவர்களின் முயற்சியால்தான் இன்று மீண்டும் தமிழும் தமிழ் இலக்கியப் பாடமும் மாணவர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. 12 பாடங்கள் என்ற அறிவிப்பு வந்த பிறகு, மாணவர்கள் மீண்டும் ர்வத்தோடு இப்பாடங்களுக்குப் பதிந்துகொண்டு வகுப்புகளுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

மழை விட்டும் தூறல்..

மழை விட்டும் தூறல் விடாத கதையாக, 12 பாடங்கள் எடுக்கலாம் என்ற அறிவிப்பு வந்த பிறகும்கூட இன்னும் சில பள்ளிகளில் பழைய நிலைதான் என்ற வருத்தமான செய்திகள் காதுக்கு வருகின்றன. அப்படி இருந்தால் இந்த விளக்கக் கூட்டத்திற்குப் பிறகு அப்படிபட்ட சிக்கல்கள் களையப்படும் என நம்புகிறோம்.

பொன்னான வாய்ப்பு

இது போராடிக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. இந்த வெற்றியைக் கொண்டாடிவிட்டு போதுமென நாம் ஓய்ந்துவிடக்கூடாது. நம் வெற்றிக்குப் பொருள் இல்லாமல் போய்விடும். உரிமையைக்காக்க, நாம் காட்டிய வேகத்தைச் செயலிலும் காட்ட வேண்டும். 10 000 மாணவர்கள் தமிழ் எடுக்கும் வேளையில் 4 000 மாணவர்கள் மட்டும் இலக்கியம் எடுக்கிறார்கள் என்பது ஏமாற்றத்தைத் தருகிறது. இந்த எண்ணிகையை உயர்த்த மலேசியத் தமிழ் இலக்கிய சிரியர் கழகம் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.



தனிப்பட்ட முயற்சிகள் பலன் தரா. இதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். தமிழ் பயிலும் மாணவர்களை இலக்கியமும் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள். உங்களுக்கும் மாணவர்களுக்கும் உதவ, கைகொடுக்க சிரியர் கழகம் காத்திருக்கிறது.


சிரியர்கள் வழிகாட்டிகள்
சமுதாயக் கட்டமைப்பில் சிரியர்கள் மிக முக்கியமானவர்கள். சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருந்து சமூகச் சிக்கலுக்குத் தீர்வைச் சொல்பவர்கள். நாமுண்டு நம் குடும்பமுண்டு என்று சுயநல வேலி அமைத்துக்கொண்டு, கைகட்டி ஒதுங்கி நின்றால் இழப்பு நம் சமுதாயத்திற்குத்தான்.

வாருங்கள். ஒரணியாக இணைவோம். மாணவர் - சிரியர் நலன் ஒன்றையே ஒரே நோக்கமாகக் கொண்ட இந்த சிரியர் கழகத்தில் இன்னும் இணையாதவர்கள் இணையுங்கள். நம் முயற்சிக்கெல்லாம் இனி ஒல்லும் வகையெல்லாம் உதவப்போகிற அமைச்சர் மாண்புமிகு டத்தோ எஸ். சுப்ரமணியம் அவர்களின் ஒத்துழைப்போடும் உங்கள் அனைவரின் தரவோடும் இன்னும் பல இலக்குகளை எட்டிப்பிடிக்க முடியும் என்று நாம் உறுதியாக நம்புவோம்.

விடைபெறும்முன் உங்கள் சிந்தனைக்கு ஒரு கவிதை

தமிழ்க்கல்வி போற்றுதும்
தமிழ்க்கல்வி போற்றுதும்

அரைத்தமிழர் எண்ணிக்கை
அரிதாகி மறைய

உயிர்த்தமிழ் நாட்டில்
உரிமையாய் உலவிட

தீந்தமிழ் உயிரில்
தேனாய்ப் பாய்ந்திட

இனமான உணர்வினை
ஈங்குநாம் காத்திட

ஒங்குபுகழ் தமிழைப்
பாங்காய் வளர்த்திட

இலக்கண இலக்கிய
இன்தமிழ் மாந்திட

புன்மையில் தமிழர்கள்
புதைவதைத் தடுத்திட

பண்பாட்டு வேர்களில்
பாயும் நஞ்சு விலகிட

தகவல் ஊடகம்
வாடும் தமிழ் நிமிர்ந்திட

வன்முறைப் பழக்கம்
வழக்கொழிந்து போக

தமிழ் இதழ் இங்கு
இன்னும் பல தோன்றிட

தமிழரின் சபைகளில்
தலைமையைத் தமிழ்காண

தமிழ்க்கல்வி போற்றுதும்
தமிழ்க்கல்வி போற்றுதும்

உயிர்த்தமிழ் நாட்டில்
உரிமையாய் உலவிட

தமிழ்க்கல்வி போற்றுதும்

அனைவருக்கும் நன்றி கூறி அமைகிறேன், வணக்கம்

(26.2.2010 நாளன்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில்,
மலேசிய தமிழ் இலக்கிய ஆசிரியர் கழக ஏற்பாட்டில் மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற எஸ்.பி.எம் தமிழ் மொழி, தமிழ் இலக்கியப் பாடங்கள் விளக்கக்
கூட்டத்தில் நான் ஆற்றிய உரை)

2 comments:

  1. super kavithaikal. Eppadi ungalala maddum mudikirathu.valthukkal.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி.
    நீங்கள் யார் என்று சொல்லவில்லையே?

    ReplyDelete