நம் குரல்

Friday, February 19, 2010

ஹைக்கூ நதிக்கரை (3)




புறம்போக்கு வீடுகள்
பலகைகளில்
பிரதமர் படங்கள்

தூங்கி வழியும் மாணவன்
வகுப்புக்கு வெளியே
சுறுசுறுப்பாய்ச் சூரியன்

மழை ஓய்ந்தது
இசைக்குக் காத்திருந்தேன்
எங்கே தவளை

உனை எப்படிக் காப்பேன்?
மன்னிப்பாய் பூச்சியே
பசியோடு பல்லி

மீன்கள் துள்ளும்
குளத்தில்
எண்ணெய்க் கசிவு

ரசித்தேன்
மலையேறும்
நத்தை

உயர்ந்த கட்டடம்
மண்ணுக்குக் கீழே
தட்டான் பூச்சி பிடித்த காடு

எரிந்த வீட்டில்
தேடினாள்
முதல் கடிதம்

மனிதர் நிறைந்த மண்டபம்
ஓடிப் பிடித்து விளையாடும்
குருவிகள்

உடைந்தால் என்ன?
இதுவும் அழகுதான்
குளத்தில் நிலவு

(இன்னும் நனைக்கும்..)

No comments:

Post a Comment